எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமையில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிசொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமையில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருடத்திற்கு 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 6 முறையாக மாற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் தான் எனவும் மேலும் கிராமத்தின் அடிப்படை தேவை குறித்து பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
இக்கூட்டத்தில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார் ராமமூர்த்தி துணை சேர்மன் துரைகற்பகராஜ் கவுன்சிலர்கள் நவமணி, காமராஜ் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திகடல்கனி கிளைக்கழக செயலாளர்கள் சின்னதம்பி சீதாராமன் வைரவன் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags : எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமையில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.