மகாத்மா காந்தி, கர்மவீரர்  காமராஜர் திருவுருவப்படத்திற்கு குமரி அனந்தன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

by Editor / 02-10-2023 12:41:31pm
 மகாத்மா காந்தி, கர்மவீரர்  காமராஜர் திருவுருவப்படத்திற்கு  குமரி அனந்தன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் கண்காணிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் கர்மவீரர்  காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள அவரது அறையில் இருவரது திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags : குமரி அனந்தன்

Share via