இந்தியாவை சேர்ந்தவர் லண்டனில் படுகொலை

by Staff / 03-10-2023 01:40:23pm
இந்தியாவை சேர்ந்தவர் லண்டனில் படுகொலை

ஹைதராபாத்தை சேர்ந்த முகமது காஜா ரயீஸ் உதீன் (65) என்பவர் லண்டனில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். திங்கள்கிழமை அன்று தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது ரயீஸ் உதீனை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. மகளின் திருமணத்திற்காக அவர் விரைவில் ஹைதராபாத் வரவிருந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இறந்தவரின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என ரயீஸ் உதீன் குடும்பத்தினர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் லண்டனில் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via