அடையாளம் தெரியாத பெண் சடலம் கொலையா, தற்கொலையா போலீஸ் விசாரணை

by Staff / 23-10-2023 02:01:16pm
அடையாளம் தெரியாத பெண் சடலம் கொலையா, தற்கொலையா போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை மலட்டாற்றில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.இதையடுத்து அந்த வழியாக விவசாய நிலத்திற்கு சென்ற பொது மக்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான காவலர் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத இறந்த பெண் கழுத்தில் கிறிஸ்டியன் சிலுவை சைன் அணிந்திருந்தார். இறந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via