தொடர். இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2  பேர் கைது

by Editor / 26-10-2023 10:03:15am
தொடர். இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2  பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.புகார்களின் அடிப்படையில்  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்  இந்த நிலையில் நேற்று இரவு ஆம்பூர் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த இருவரை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டத்தில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில்  பேரணாம்பட்டு சாத்கர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (20) மற்றும் பேரணாம்பட்டு கோட்டைகாலணி பகுதியை சேர்ந்த வல்லரசு (24) என்பதும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்பூர் பகுதி சேர்ந்த சிலர் உதவியுடன் தொடர் இரு சக்கர வாகனத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது இதனையடுத்து
தொடர் இருசக்கர வாகன திருட்டில்  ஈடுபட்டு கோட்டைகாலனி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 10 இருசக்கர வாகனங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து  ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும்  சிறையில் அடைத்தனர்.

 

Tags : தொடர். இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2  பேர் கைது

Share via