தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

by Staff / 31-10-2023 05:17:40pm
தனியார் பேருந்தும் கண்டெய்னர்  லாரியும் நேருக்கு நேர் மோதி  20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி புறவழிச்சாலை பகுதியில் தனியார் பேருந்தும் கண்டெய்னர்  லாரியும் இன்று மதியம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.  காயம் அடைந்தவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் நைனா முகமது தலைமையில் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  படுகாயம் அடைந்தவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via