காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

by Staff / 11-10-2023 04:52:58pm
காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்னதாக காவிரியில் இருந்து 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க தமிழ்நாடு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via