பப்ஜி விபரீதம்.. பெற்றோரை கொன்ற மகன்

by Staff / 06-08-2023 02:12:54pm
பப்ஜி விபரீதம்.. பெற்றோரை கொன்ற மகன்

உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான மகன் பெற்றோரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியின் நவாபாத் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் லட்சுமி பிரசாத் (60), இவரது மனைவி விமலா (55), மகன் அங்கித் (28) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். அங்கித் கடந்த இரண்டு ஆண்டுகளாக பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி அவரின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெற்றோர் கண்டித்ததால் இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் அங்கித். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கித்தை கைது செய்தனர்.

 

Tags :

Share via