ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து

by Staff / 06-08-2023 02:16:32pm
ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். லேசான காயமடைந்த தமிழ்ச்செல்வி சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து சில வாரங்களே ஆன நிலையில், தற்போது பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via