வ.உ.சி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை இராஜாஜி சாலை, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பிலான கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களது வாழ்க்கைக் குறிப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மடிப்பேடுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.
Tags :