ரவிசாஸ்திரிக்கு கரோனா

by Editor / 05-09-2021 07:03:10pm
ரவிசாஸ்திரிக்கு கரோனா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட லேடரல் புளோ சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து ரவிசாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததையடுத்து இன்றைய 4-வது நாள் ஆட்டதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via