2வது நாளாக தொடரும் சோதனை தொடர்கிறது...
சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகத்தில் காலை முதலே வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட கிளை களுடன் இயங்கிவரும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களிழும், ஆர்த்தி ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் .2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Tags : The test continues for the 2nd day ...