கந்துவட்டி கொடுமைக்கு ஆயுதப்படை காவலர் தற்கொலை -கந்துவட்டி அனிதா கைது

by Editor / 07-06-2022 10:01:16pm
கந்துவட்டி கொடுமைக்கு  ஆயுதப்படை காவலர் தற்கொலை -கந்துவட்டி அனிதா கைது

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) என்பவர் கடந்த 1ம் தேதி விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்  கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கடலூரில் கந்துவட்டி கொடுமையினால் காவலரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குள்ள காவலர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்தநிலையில், கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதாவை போலீசார் கைது செய்தனர். காவலர் செல்வகுமாருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதால் கந்துவட்டி கும்பல் கதிகலங்கியுள்ளத்தியுள்ளது.

 

Tags : Armed policeman commits suicide for Kanduvatti violence - Kanduvatti Anita arrested

Share via