அரசு பங்களாவை காலி செய்தார் மஹூவா மொய்த்ரா

by Staff / 19-01-2024 04:12:01pm
அரசு பங்களாவை காலி செய்தார் மஹூவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ரா அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பர் மாதம் அவர் எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அரசு பங்களாவை கடந்த 7ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என அரசு கூறியிருந்தது. இந்நிலையில் மஹுவா மொய்த்ரா டெல்லியில் உள்ள அரசு பங்களாவை இன்று காலி செய்தார்.  சாவி எஸ்டேட் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via