ஆளுநர் ரவிக்கு இனி மேலாவது புரியுமா? கி.வீரமணி

by Staff / 14-08-2023 03:41:14pm
ஆளுநர் ரவிக்கு இனி மேலாவது புரியுமா? கி.வீரமணி

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மாணவன் ஜெகதீஸ்வரன் (19 வயது) நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மாணவனின் தந்தை செல்வசேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நீட் தேர்வினால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா? மனிதத்தை மதிக்காத 'மனிதர்'களாக இப்படி மமதையுடன் பேசுவதனால் யாருக்கு என்ன பயன்? மாணவர்களே தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து துணிவுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via