மாணவனிடம் நலம் விசாரித்தார் பாரிவேந்தர் எம்.பி

by Staff / 14-08-2023 03:34:28pm
மாணவனிடம் நலம் விசாரித்தார் பாரிவேந்தர் எம்.பி

நெல்லையில், நாங்குநேரியில் 12வது படிக்கும் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராதேவி ஆகியோர் மீது சக மாணவர்கள் ஜாதிய ரீதியான பிரச்னையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தாக்கப்பட்ட மாணவன், அவரது சகோதரியிடம் பாரிவேந்தர் எம்.பி. தொலைபேசியில் நலம் விசாரித்தார். மேலும், எஸ். ஆர். எம். குழுமம் சார்பில் மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அனைத்தும் செய்து கொடுப்பதாகவும் பாரிவேந்தர் எம்.பி. உறுதியளித்துள்ளார். தற்போது, மாணவன் கையில் இருந்த மாவுக்கட்டு அகற்றப்பட்டு பரிசோதனைகள் செய்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via