தமிழ்நாட்டின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியம்

by Staff / 14-08-2023 03:30:52pm
தமிழ்நாட்டின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியம்

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மாணவன் ஜெகதீஸ்வரன் (19 வயது) நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மாணவனின் தந்தை செல்வசேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via