மாணவிகளின் பெற்றோர்கள் புகார் - தொடக்கப் பள்ளி ஆசிரியர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அடுத்த கொட்டகுடி கிராமம். இக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் ஆதி முத்தமிழ்ச் செல்வன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆசிரியர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் கொடுக்க,அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அபிராமம் போலீசார் ஆதிமுத்து தமிழ்ச்செல்வனை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.விசாரணையில் ஆசிரியர் ஆதி முத்தமிழ்செல்வன் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Tags : Parents of students complain - Primary school teacher arrested