வெற்றிப்பெற்ற பா.ஜ.,வினருக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து

by Editor / 20-10-2021 10:47:37am
வெற்றிப்பெற்ற பா.ஜ.,வினருக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து

தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் (அக்.,18) அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவு:தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். https://t.co/xJNjD0A12O- Narendra Modi (@narendramodi) October 20, 2021 இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via