மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்

by Staff / 20-05-2023 03:42:52pm
மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தண்டனை கைதி சீனிவாசன் (48) என்பவர் தப்பி ஓடினார். கொள்ளை வழக்கில் இவருக்கு கடந்த 16ஆம் தேதி 10 ஆண்டுகள் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில், வலிப்பு நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடினார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via