முதல் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

by Staff / 30-11-2023 03:57:25pm
முதல் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மும்பை வழித்தடத்தில் அமையவுள்ள புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதி ஆகஸ்ட் 2026-க்குள் தயாராகிவிடும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். குஜராத்தின் சூரத்தில் இருந்து பிலிமோரா வரை 50 கி.மீ. தூரத்திற்கு முதல் ரயில் சேவை தொடங்கப்படும். கோவிட்-க்கு முந்தைய ரயில்களுடன் ஒப்பிடும்போது புதிய ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார். பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை 2,792-ல் இருந்து 2,856 ஆக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via