போதை மாத்திரை விற்பனை- இருவர் கைது
கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியில் சிலர் போதை மாத்திரை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் நேற்று கரும்புக்கடை போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். சாரமேடு பகுதியில் உள்ள காலி நிலத்தில் நின்று கொண்டி ருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்த போது அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை சாரமேடு இலாகி நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் 24 வயதான மன்சூர் ரஹ்மான், அவரது தம்பி 22 வயதான அனீஷ் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags :