தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்பட தமிழகத்தின் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தின் தன் மாவட்டங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
Tags : களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.