எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த விஜய பிரபாகரன்
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய வேட்பாளர் விஜய பிரபாகரன், எனக்காக பிரச்சாரம் செய்ய வந்த வருக்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக வருவேன் என்று தெரியாது. நான் இந்த மண்ணுக்கு சொந்துக்காரன். முரசு சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களது குரலாக டெல்லியில் ஒலிப்பேன் என்றார்.
Tags :