பாஜக அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

by Staff / 29-03-2024 02:58:58pm
பாஜக அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தேனாடுகம்பை காவல் துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 25-ம் தேதி உதகையை அடுத்துள்ள கடநாடு கிராமத்தில் முன் அனுமதி பெறாமல் எல்.முருகன் கூட்டம் நடத்திய கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதால், தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி, தேனாடுகம்பை காவல்நிலையத்தில் எல்.முருகன் மீது புகார் அளித்தார். அதனடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via