இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கடந்த 22ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் தனது நகை அடகு கடை வாசலில் வைத்து மர்ம கும்பல்ளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடுவர் நீதிமன்றம் என் 4 ல் நேற்று மாலை 3 பேர் சரணடைந்துள்ளனர்
ஆனால் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் யாரும் இன்னும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில்
வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் சுமார் 800-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
Tags :















.jpg)


.jpg)
