திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

by Staff / 24-02-2023 04:41:37pm
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜாபாஷா (43). இவரது மனைவி மைதீன் மர்லியா என்ற மல்லிகா (வயது 36). இருவரும் சென்னை வடபழனியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தபோது, காதலித்து கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தம்பதியர் திருச்செந்தூரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆஷிக் ஹூமீது (13), யாசர் அகமது (11) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மல்லிகா திருச்செந்தூரில் உள்ள பழைய இரும்பு சாமான் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், மல்லிகா கடந்த 21-ந் தேதி மாலையில் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பாமல் மாயமானார். ராஜாபாஷா பல இடங்களில் தேடியும் மனைவியை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தெப்பக்குளம் அருகே உள்ள கிணற்றில் மல்லிகா பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ராஜா பாஷா கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகாபாய், சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ பகுதிக்கு வந்து மல்லிகா உடலை மீட்டனர். அவரது உடல் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மல்லிகா கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மல்லிகா தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via