கண்ணூர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

by Staff / 20-01-2024 12:03:40pm
கண்ணூர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

கேரளாவின் கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்ணூர்-ஆலப்புழாவின் (16308) எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை காலை கண்ணூர் ரயில் மையத்தில் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், இன்று காலை 5:10 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் காலை 6:43 மணிக்கு இயக்கப்பட்டது. தடம் புரண்ட பெட்டிகள் ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டன.இந்த சம்பவத்தில் சிக்னல் பெட்டி சேதமடைந்தது.

 

Tags :

Share via