பீர் தொழிற்சாலையை மூடும்படி பிறப்பித்த உத்தரவுக்கு தடை
திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் மற்றும் அரண்வாயல் பகுதிகளில் யுனைடெட் பிரிவரிஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பீர் தொழிற்சாலை உள்ளது. கடந்த ஜன. 24-ம் தேதி அங்கு ஆய்வு நடத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியம், பல்வேறு விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி ஆலையை மூட உத்தரவிட்டது. மேலும், ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்கவும் மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பீர் தொழிற்சாலை நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ். எஸ். சுந்தர், என். செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
Tags :