சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

by Staff / 22-10-2022 04:43:49pm
 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாதையன் (வயது 59). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இறந்து போன மாதையனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டுமே திருமணம் ஆகி உள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 

Tags :

Share via