நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய பணிப்பெண் கைது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக கடந்த மாதம் 27ஆம் தேதி தேனாம்பேட்டைபோலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனது. இந்த நிலையில், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி, லட்சுமி, வெங்கட் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் திட்டமிட்டு லாக்கர் சாவியை எடுத்து நகைகளை ஈஸ்வரி திருடியது தெரியவந்தது இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைதுசெய்தனர்..
Tags :