by Staff /
12-07-2023
02:14:11pm
மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு ஒதுக்கும் உணவுப் பொருட்களை கூட்டுறவு விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்து விலை கட்டுப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக பருப்பு, மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
<br />
Tags :
Share via