காலாவதியான மாத்திரைகள் வழங்கியதால் பரபரப்பு
கேரளாவின் காசர்கோடு அருகே கிணனூர் - கரிந்தளம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய எலிக்காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் காலாவதியாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மே 2023 காலாவதி தேதியுடன் கூடிய மாத்திரைகள் ஜூலையில் வெளியிடப்பட்டு தொழிலாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பரிந்துரையின்படி இந்த மாத்திரைகள் அங்குள்ள மருந்தகத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து மாத்திரை சாப்பிட்டவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags :