கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

by Admin / 10-08-2021 04:58:06pm
கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

 

பொள்ளாச்சியில் குடும்பம் நடத்த தொடங்கிய 10 நாளில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் பவித்திரன் மணிகண்டன் (வயது 24) டிரைவர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான 30 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 
இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன் படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 பேரும் சேர்ந்து வீடு எடுத்து கணவன்-மனைவி போல வாழ்ந்துவந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அந்தப் பெண், பவித்ரன் மணிகண்டனிடம் சண்டை போட்டுக்கொண்டு அவரை பிரிந்து சென்றார். இதனால் பவித்ரன் மணிகண்டன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மதுக்கரை குரும்பபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (30) டிரைவர். இவரது மனைவி ரஞ்சிதா (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாபுவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் அடிக்கடி கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பாபு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ரஞ்சிதா கணவரிடம் பேசாமல் இருந்து வந்தார். பாபு பேசியும் ரஞ்சிதா பேசாததால் மனவேதனை அடைந்தார்.

இதனால் விரக்தி அடைந்து அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via