அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு மகன்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 31-07-2024 01:40:12pm
அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு மகன்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஐயப்பன் முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், மற்றும் அவரது தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகினர்.

 

Tags :

Share via