போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை

by Staff / 31-07-2024 01:34:52pm
போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மானூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(20) மற்றும் இவருக்கு உதவியாக இருந்த இவரது தந்தை சங்கர்(54) ஆகிய இருவரையும் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, நீதிமன்ற தலைமை காவலர் பாக்கியலட்சுமி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி விக்னேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2, 20, 000/- அபராதமும் விக்னேஷின் தந்தை சங்கருக்கு ரூ. 10, 000/- அபராதமும், கட்ட தவறினால் 06 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 35 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via