மாற்றத்தை உருவாக்குமா.. மாநாடு..?

by Editor / 23-09-2024 07:40:47am
மாற்றத்தை உருவாக்குமா.. மாநாடு..?

தமிழக வெற்றிக் கழக மாநாடு ஏற்பாடு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்  கட்சியைத் தொடங்கியவிஜய், கட்சியின் முதல் மாநாட்டை வெகு விமரிசையாக தமிழக அரசியல் கட்சிகள் வியக்கும்வண்ணம் நடத்த தீவிரம் காட்டி வருகிறார்.விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன மாநில மாநாடாக இது அமையும் என்றும் அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாநாட்டு நிர்வாகக் குழு, நிதிக்குழு, சட்ட ஆலோசனைக் குழு, விளம்பரக் குழு உள்ளிட்ட பல குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜயின் இந்த மாநாடு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தாலும் அரசியலில் அவரைபொருத்தவரை இளையசமுதாயத்தை மையம் வைத்து மாற்றத்தை உருவாக்கும் மாநாடாகவே இந்தமாநாட்டை நடத்திக்காட்டிட பெரும் முனைப்பு காட்டப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பே அனைத்து பணிகளையும் முடிக்கும்படி விஜய் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : மாற்றத்தை உருவாக்குமா மாநாடு..?

Share via