பூட்டை உடைத்து - 4 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு-மர்ம நபரை தேடி வரும் போலீசார்.

by Admin / 20-01-2024 10:16:55am
 பூட்டை உடைத்து  - 4 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு-மர்ம நபரை தேடி வரும் போலீசார்.

கோவில்பட்டி சீனிவாச நகர் 6வது தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவரது மனைவி ரமணி. தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 14 ந்தே தேதி ரமணி தனது குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் குகன் பாறைக்கு சென்று உள்ளார். ரமணியின் வீட்டு மாடியில் வசந்தகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். அவரும் தைப்பொங்கல் பண்டிகைக்காக கடம்பூர் அருகே உள்ள இளவலங்கால்  குடும்பத்துடன்  ஊருக்கு சென்றுள்ளார். 

பொங்கல் பண்டிகை முடிந்து வசந்தகுமார் வீட்டிற்கு வந்த போது கீழே இருந்த ரமணி வீடு மற்றும் மேல் தளத்தில் இருந்த தனது வீடு ஆகியவற்றின்  பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதனை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.போலீசார் விரைந்து வந்த பார்த்த போது வீட்டின் பூட்டுக்களை உடைத்து, உள்ளே சென்று பீரோக்களை உடைத்து பொருள்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

ரமணி வீட்டில் ஐந்து கிராம் எடை கொண்ட  இரண்டு ஜோடி கம்மல்,, ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் ஆகியவை திருடப்பட்டு இருப்பதும். வசந்தகுமார் வீட்டில் நான்கு தங்க மோதிரங்கள்,, ஒரு செயின்,, கம்மல் என 26 கிராம் திருடு போயிருப்பது தெரியவந்தது.திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒரு மர்ம நபர் நேற்று நள்ளிரவு சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்துள்ளது. 

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

 பூட்டை உடைத்து  - 4 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு-மர்ம நபரை தேடி வரும் போலீசார்.
 

Tags :

Share via