திரை அரங்கில் இடைவேளையின் போதும் டிக்கெட்டை கேட்டு தகராறு ஊழியரை துரத்தி துரத்தி அடித்த போதை ஆசாமிகள்

by Staff / 11-06-2022 11:50:09am
திரை அரங்கில் இடைவேளையின் போதும் டிக்கெட்டை கேட்டு தகராறு ஊழியரை துரத்தி துரத்தி அடித்த போதை ஆசாமிகள்

திருவள்ளூரில் தனியார் திரையரங்கில் டிக்கெட் கேட்டு மது போதையில் அடியாட்களுடன் வந்து தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்கு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் படம் பார்க்க வந்த இரண்டு பேர் மது போதையில் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. திரைப்படம் இடைவெளியை நெருங்கியதும் மது அருந்தி இருப்பதாலும் திரையரங்கின்  நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் டிக்கெட் தர இயலாது என திரையரங்கம் ஊழியர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் 15 பேர் கொண்ட அடியாட்களை அழைத்து வந்து திரையரங்க ஊழியரை துரத்தி துரத்தி அடித்த உள்ளனர்.

 

Tags :

Share via