எம்ஜிஆர் பற்றி ஆ ராசா பேச்சு: ஓபிஎஸ் கண்டனம்

by Staff / 01-02-2024 03:34:22pm
எம்ஜிஆர் பற்றி ஆ ராசா பேச்சு: ஓபிஎஸ் கண்டனம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவுக்கு முன்னாள் முதலமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நாவடக்கம் இல்லாமல் பேசும் திரு. ராசாவுக்கு, ‘நாவை அடக்காவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்’ என்ற வள்ளுவரின் வாக்கினை சுட்டிக்காட்டுவதோடு, வருகின்ற தேர்தலில் இதற்கான விளைவுகளை தி.மு.க.வும், திரு. ஆ. ராசாவும் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via