அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் இபிஎஸ் தலைமையில்

by Staff / 09-02-2024 12:03:46pm
அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் இபிஎஸ் தலைமையில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் இதில் பங்கேற்று திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

Tags :

Share via