தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அயோத்திக்கு அழைப்பு: ராகுல் விமர்சனம்

by Staff / 19-02-2024 03:26:59pm
தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அயோத்திக்கு அழைப்பு: ராகுல் விமர்சனம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்தார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக அவர் பிரயாக்ராஜில் பேசினார். அப்போது, அம்பானி, அதானி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். அங்கு ஓபிசி மற்றும் தலித்துகள் யாராவது இருந்தார்களா என்று கேள்வி எழுப்பினார். ஜனாதிபதி திரௌபதி முர்முவை கூட அழைக்கவில்லை? என் வேதனை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via