பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போது அவசியமில்லை - இபிஎஸ்
பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போது அவசியமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அதிமுக சின்னத்தை முடக்குமாறு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுகவின் குரல் நாடாளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும். வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அதிமுக கூட்டணி முடிவாகும்' என்றார்.
Tags :