மோடி எத்தனை முறை வந்தாலும் எதுவும் நடக்காது: பொன்முடி
மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பாஜக வெற்றி பெறாது என பொன்முடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு 60 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி தான் காரணம். இன்றைக்கு பிரதமர் இதை ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் எத்தனை பொய்களை கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். அதற்காக எதையாவது பிரதமர் பேசி விட்டு செல்கிறார். அதில் எதுவும் உண்மையல்ல, பொய்களை திறம்பட பேசியுள்ளார் என அவர் விமர்சித்தார்.
Tags :