நகராட்சி பொறியாளரின் 9 வங்கி கணக்கு, லாக்கர்முடக்கம்.

by Editor / 08-12-2021 01:36:58pm
நகராட்சி பொறியாளரின் 9 வங்கி கணக்கு, லாக்கர்முடக்கம்.

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் 23.5 லட்சம் ரொக்கம், 10.75 லட்சம் வரைவோலை, 193 சவரன் தங்க நகை, 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.
நகராட்சி பொறியாளர் செல்வகுமார், அவர் மனைவி சிவசங்கரி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறியாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெயரில் உள்ள வெவ்வேறு 9 வங்கி கணக்குகளையும், அதோடு தொடர்புடைய லாக்கர்களையும் முடக்கியுள்ளனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வேலூர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via