மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டம்! தொடரும் போராட்டம்

by Staff / 10-07-2024 01:46:59pm
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டம்! தொடரும் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க முப்பெரும் குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சேலம் சங்கம் சார்பாக சேலம் நீதிமன்ற நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via