சென்னை - புதுச்சேரி- கடலூர் இடையிலான ரயில் சேவை-

by Editor / 04-02-2023 04:02:34pm
சென்னை - புதுச்சேரி- கடலூர் இடையிலான ரயில் சேவை-

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வருமாறு:தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சென்னை - புதுச்சேரி- கடலூர் இடையிலான ரயில் சேவையை தொடங்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் மத்திய ரயில்வே இணையமைச்சர் திருமதி ராவ்சாகப் பாட்டில் தான்வி அவர்களுக்கும் அண்மையில் கோரிக்கைக் கடிதம் அளித்திருந்தேன். 

அதனை ஏற்று, சென்னை - புதுச்சேரி- கடலூர் இடையிலான ரயில் சேவையை தொடங்க நிதி ஒதுக்கி இருப்பதற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே இணையமைச்சர் அவர்களுக்கும் புதுச்சேரி & தமிழக மக்களின் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கனவு திட்டத்ததிற்கான ரயில் பாதை அமைக்கும் பணியை இந்த ஆண்டே தொடங்க இருக்கும் மத்திய அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவரை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via