கலைஞரின் எழுத்துக்கு தனி மரியாதை உள்ளது. ஆனால் பேனா வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது-புகழேந்தி -

by Editor / 04-02-2023 04:12:17pm
 கலைஞரின் எழுத்துக்கு தனி மரியாதை உள்ளது. ஆனால் பேனா வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது-புகழேந்தி -

கர்நாடக மாநில அ. தி. மு. க. நிர்வாகி புகழேந்தி நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்றுக் கொள்கிறோம். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொண்டு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது. ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார். பொதுமக்களின் கருத்தும் அதுவாக தான் உள்ளது.

எனவே உச்சநீதி மன்றத்தின் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வத்துடன் கலந்து ஆலோசித்து ஈரோடு தொகுதி வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசித்து முடிவெடுக்கும் பட்சத்தில் அவரது சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.

சசிகலாவிற்கு எடப்பாடி துரோகம் செய்துள்ளார். ஏற்கனவே நடந்து முடிந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமியை முழு பொறுப்பாவார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது.

பாரதிய ஜனதாவை பொருத்தமட்டில் அவர்களுக்கு ஒரு கொள்கை. அந்த கட்சியை கண்டு எங்களுக்கு பயமில்லை. மரியாதை தான் உள்ளது.திராவிட இயக்கத்திற்கு 55 ஆண்டு கால வரலாறு உள்ளது. பேனாவை வைத்து தான் கலைஞரை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கலைஞரின் எழுத்துக்கு என்று தனி மரியாதை உள்ளது. ஆனால் பேனா வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via