தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

by Staff / 14-12-2023 12:29:23pm
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

அரசு பல்வேறு கடிதங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வந்தாலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்க கடலில் மீன் பிடிக்க சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
 

 

Tags :

Share via