கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் ஈரோடு வாலிபர் அதிரடி கைது

by Admin / 28-08-2021 04:01:31pm
கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் ஈரோடு வாலிபர் அதிரடி கைது

 

மாணவி பலாத்கார வழக்கில் ஈரோட்டை சேர்ந்த பூபதி என்ற வாலிபரை கர்நாடக மாநில தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20 வயது மாணவி கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவர் தன்னுடன் படித்த ஒரு மாணவரை காதலித்து வந்தார்.

 சம்பவத்தன்று காதலர்கள் 2 பேரும் காரில் காரில் மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா என்ற பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் காதலனை கடுமையாக தாக்கி கட்டி போட்டனர்.

பின்னர் கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

ஆபத்தான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியை அவரது காதலன் மீட்டு மைசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவனை தரப்பில் ஆலனஹல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த போலீசார் மாணவி மற்றும் அவரது காதலனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாலியல் கும்பலை சேர்ந்தவர் தமிழில் பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மைசூர் மற்றும் அதனை சுற்றி உள்ள தமிழக எல்லையை சேர்ந்த சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரம் பகுதியை சேர்ந்த பூபதி (28) என்ற வாலிபரை இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்து அழைத்து சென்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை பற்றிய தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via